சடலத்தின் கண்களை தின்ற எலிகள்: ரயில்வே போலீஸ் மீது வழக்கு

ரயிலில் பயணித்தபோது மரணம் அடைந்தவரின் உடலை இறக்கிய ரயில்வே போலீஸார், இரவில் விட்டுச்சென்றபோது சடலத்தின் கண்களை எலிகள் தின்றுள்ளன. மரணமடைந்தவரின் குடும்பத்தினர் ரயில்வே போலீஸின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆக்ராவை சேர்ந்தவர் ஜிதேந்திர சிங் (வயது 33). இவர் கர்நாடகா விரைவு ரயிலில் பெங்களூருவிலிருந்து டெல்லிக்கு பயணித்துள்ளார். கடந்த வியாழனன்று ஜிதேந்திர சிங் சுயநினைவை இழந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்துவிட்டதாக கூறியதால், உடலை மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் அருகிலுள்ள இட்டார்சி என்ற பெரிய ரயில் நிலையத்தில் போலீஸார் இறக்கியுள்ளனர். இட்டார்சி, பெரிய சந்திப்பு ரயில் நிலையமாயினும் அங்கு அமரர் அறை இல்லை.

மாதந்தோறும் இதுபோன்று நான்கு முதல் ஆறு சடலங்கள் ரயிலிலிருந்து இங்கு இங்கு இறக்கப்படுவதாக கூறப்படுகிறது. வியாழன் அன்று இரவு 11:30 மணியளவில் சடலத்தை இறக்கிய போலீஸார், அங்கிருந்த குடிசை ஒன்றில் அதை வைத்துவிட்டு சென்றுள்ளனர். தகவல் அறிந்து மறுநாள் பிற்பகல் ஜிதேந்திர சிங்கின் குடும்பத்தினர் வந்து பார்த்தபோது, சடலம் பாதிப்புக்குள்ளாகியிருப்பதை கண்டுள்ளனர். சடலத்தின் கண்களை எலிகள் தின்றிருந்தன. அமரர் அறை இல்லாத காரணத்தினால் இரவில் இறக்கப்படும் சடலங்களை அக்குடிசையில் வைப்பது வழக்கம் என்றும் இதுவரை எந்தப் பாதிப்பும் நடந்ததில்லை என்றும், ஒருவரை காவலுக்கு வைத்திருந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஜிதேந்திர சிங்கின் குடும்பத்தினர் கவனக்குறைவாக இருந்ததாக ரயில்வே போலீசார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :