திருப்பதி : ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு

by Balaji, Dec 1, 2020, 11:52 AM IST

திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, 300 ரூபாய் ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு, இன்று ( செவ்வாய்க்கிழமை) துவங்குகிறது.

முதல் முறையாக இந்த ஆண்டு 10 நாட்கள் வைகுண்ட வாயில் வழியாக பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன் படி, டிசம்பர் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 3 - ஆம் தேதி வரை வைகுண்ட வாசல் திறக்கப்படும். இதற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் http://tirupathibalaji.ap.gov.in/ என்ற இணையதள த்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

You'r reading திருப்பதி : ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை