முன்பதிவு செய்யாமல் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம்

கொரோனா பரவல் காரணமாகச் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தற்போது முன்பதிவு செய்து மட்டுமே தரிசனத்திற்குச் செல்ல முடியும். ஆனால் கடந்த சில தினங்களாகத் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்யாமல் சபரிமலை செல்கின்றனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் வேகம் சற்று குறைந்து வருகின்ற போதிலும், கேரளாவில் அதன் தீவிரம் இன்னும் குறையவில்லை. இதனால் லட்சக்கணக்கானோர் குவியும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 16ம் தேதி முதல் சபரிமலையில் மண்டல கால பூஜைகள் தொடங்கின. அன்று முதல் வார நாட்களில் 1,000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2,000 பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று ஏற்கனவே திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்திருந்தது. வழக்கமாக மண்டலக் காலத்தில் சபரிமலையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தற்போது பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மண்டலக் காலத்தில் சபரிமலை செல்ல விரும்பிய லட்சக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதையடுத்து தினசரி பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கேரள அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வாரநாட்களில் 2,000 பக்தர்களையும், சனி, ஞாயிறு நாட்களில் 3,000 பக்தர்களையும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த வாரம் முன்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டது. முன்பதிவு தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே அனைத்து நாட்களுக்கும் முன்பதிவு முடிந்துவிட்டது. இதனால் பல பக்தர்கள் சபரிமலைக்குச் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.இந்நிலையில் கடந்த சில தினங்களாகச் சபரிமலைக்கு முன்பதிவு செய்யாமல் ஏராளமான பக்தர்கள் செல்ல முயற்சித்தனர். ஆனால் அவர்களை போலீசார் தரிசனத்திற்குச் செல்ல அனுமதிக்கவில்லை. தங்களுக்கு முன்பதிவு கிடைக்கவில்லை என்றும், எனவே தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் போலீசாரிடம் கூறினர்.

ஆனால் அதை போலீசார் ஏற்கவில்லை. எந்தக் காரணம் கொண்டும் முன்பதிவு இல்லாமல் தரிசனத்திற்குச் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறி பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர். இதையடுத்து பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பம்பையில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் நிலக்கல் என்ற இடம் உள்ளது. இங்கு வைத்துத் தான் பக்தர்களின் ஆவணங்களை போலீசார் பரிசோதித்து வருகின்றனர். இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு கூறுகையில், சபரிமலையில் இந்த வருடம் தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இது தொடர்பாக ஏற்கனவே முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில் கொரோனா ஆபத்து அதிக அளவில் இருக்கிறது. கோவில் ஊழியர்கள் ஏராளமானோருக்கு நோய் பரவியுள்ளது. எனவே முன்பதிவு செய்யாமல் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வரவேண்டாம். பக்தர்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :