உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தாயை ஏமாற்றி ₹2.5 கோடி மோசடி.. மனைவியுடன் ஒருவர் கைது

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டேவின் தாயை ஏமாற்றி ₹2.5 கோடி மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவரிடம் பணிபுரிந்து வந்த ஒருவரையும், அவரது மனைவியையும் நாக்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் எஸ்.ஏ. போப்டே. இவரது தாய் முத்தா போப்டே. இவருக்கு சொந்தமாக நாக்பூர் ஆகாஷ்வாணி சதுக்கம் அருகே சீடன் லான் என்ற பெயரில் ஒரு பண்ணை நிலம் உள்ளது. இந்த பண்ணை நிலம் திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விடப்பட்டு வந்தது. இதன் மேற்பார்வையாளராக அப்பகுதியைச் சேர்ந்த தபஸ் கோஷ் (49) என்பவரை முக்தா போப்டே நியமித்து இருந்தார்.

அவருக்கு சம்பளமும், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கமிஷனும் கொடுக்கப்பட்டு வந்தது. 2007ம் ஆண்டு முதல் தபஸ் கோஷ் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் திருமணம் உட்பட நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் பணத்தை ஒழுங்காக முக்தா போப்டேவுக்கு கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையை குறைத்துக் காண்பித்து இவர் மோசடி செய்து வந்துள்ளார். ஆனால் இந்த விவரம் முக்தா போப்டேவுக்கு தெரியாது. தபஸ் கோஷ் சொல்வதை அவர் நம்பி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பல திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. நிகழ்ச்சிகளுக்கு அட்வான்ஸ் பணம் கொடுத்தவர்கள் தபஸ் கோஷிடம் பணத்தை திரும்பக் கேட்டனர்.

ஆனால் அவர் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் முக்தா போப்டேவிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் விசாரித்தபோது தான் தபஸ் கோஷின் மோசடி விவரம் தெரியவந்தது. இதுகுறித்து அவர் நாக்பூர் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இது தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் இதுவரை ₹ 2.5 கோடி தபஸ் கோஷ் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரையும், மோசடியில் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் தாயிடமே கோடிக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :