அபுதாபியில் இளம் பெண் கூட்டு பலாத்காரம் சமூக வலைத்தளங்களில் வீடியோவை பகிர்ந்த கும்பல் கைது

அபுதாபியில் இளம் பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே கும்பலை அபுதாபி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
பொதுவாக ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் குற்றங்கள் நடப்பது மிகவும் குறைவாகும். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் கடுமையான தண்டனை உடனடியாக கிடைக்கும் என்பது தான் இதற்குக் காரணமாகும்.

இந்நிலையில் அபுதாபியில் ஒரு இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளம் பெண்ணை 6 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். அபுதாபியில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் அபூர்வமான ஒன்றாகும். இந்த வீடியோ அபுதாபி போலீசுக்குக் கிடைத்த உடன், விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்ய அமீரக அட்டர்னி ஜெனரல் உத்தரவிட்டார். அபுதாபி போலீசாரின் தீவிர விசாரணையில் சம்பவம் நடந்த ஒரு சில மணி நேரத்திலேயே 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த தகவலை அமீரக அட்டர்னி ஜெனரல் டாக்டர் ஹமத் செய்ப் அல் ஷம்சி வெளியிட்டார். இவரது தலைமையிலான தனிப்படை தான் விசாரணை நடத்தி குற்றவாளிகளை அதிரடியாகக் கைது செய்தது. இதுகுறித்து அல் ஷம்சி கூறுகையில், இதுபோன்ற சம்பவங்கள் அமீரகத்தில் ஒருபோதும் நடக்கக் கூடாதது ஆகும். இது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றமாகும். அதனால் தான் நானே நேரடியாக விசாரணையில் ஈடுபட்டேன். குற்றம் செய்தவர்களுக்கு உரிய கடும் தண்டனை கண்டிப்பாகக் கிடைக்கும்.

இதுபோன்ற சம்பவங்கள் அமீரகத்தில் நடப்பது மிக மிக அபூர்வமானதாகும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். நம் நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds