விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு நாளை உண்ணாவிரதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப்போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தன்னுடைய கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் நாளை உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை.

எல்லா பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் தான் முடிவடைந்தன. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். டெல்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருவது மத்திய அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு தற்போது பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது.இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது: நம் நாட்டின் விவசாயிகளுக்காக நாளை ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க தீர்மானித்துள்ளேன். ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் நாளை உண்ணாவிரதம் இருக்க வேண்டும். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் என்று சில பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். விவசாயிகளும் தேசவிரோதிகள் என்று அவர்கள் கூறுகின்றனர். ஏராளமான முன்னாள் ராணுவத்தினர், தேசிய மற்றும் சர்வதேச வீரர்கள், பாடகர்கள், கலைஞர்கள், டாக்டர்கள், வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இவர்கள் எல்லோரும் தேசவிரோதிகளா? இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் சிறைத்துறை டிஐஜி லக்மீந்தர் சிங் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். வேளாண் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் என்னுடைய விவசாய சகோதரர்களுக்காக நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன். பஞ்சாப் அரசிடம் என்னுடைய ராஜினாமா கடிதத்தை நேற்று கொடுத்து விட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :