The Presidential Years புத்தகம் வெளியாகுமா?!.. பிரணாப் முகர்ஜியின் பிள்ளைகள் சண்டையால் வந்த குழப்பம்

டெல்லி: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் வரலாற்று நினைவுக்குறிப்பு புத்தகத்தை வெளியிடுவதில் அவரது பிள்ளைகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் சர்ச்சையாகியிருக்கிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி மரணமடைந்தார். இதற்கிடையே, குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவி வகித்த காலத்தைப் பற்றிய நினைவுக்குறிப்பு புத்தகம் 'The Presidential Years' என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. இந்த புத்தகத்தின் சில பகுதிகளைப் புத்தக வெளியீட்டு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.

ஆனால்,பிரணாப் முகர்ஜியின் மகனான அபிஜித் முகர்ஜி தனது ட்விட்டரில், புத்தகத்தை ஒருமுறை அதை நான் முழுமையாகப் படிக்க வேண்டும் என்றும் புத்தகத்தை வெளியிடுவதை நிறுத்திவைக்குமாறு பதிவிட்டிருக்கிறார். இதற்குப் பதிலளித்த பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, தந்தை மரணிப்பதற்கு முன் கடைசியாக எழுதிய புத்தகம் இது. இறுதியாக ஒருமுறை படித்து, அவர் கைப்பட திருத்திக் கொடுத்தப் பிறகு தான் புத்தகம் வெளியிடப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, The Presidential Years' புத்தகத்திலிருந்து வெளியான சிறு பகுதியில் காங்கிரஸ் பற்றிய பிரணாப் முகர்ஜியின் கடுமையான விமர்சனம் வெளிப்பட்டிருக்கிறது. நான் குடியரசுத் தலைவரான பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைமை தேவையான இடத்தில் தன் கவனத்தை இழந்துவிட்டது காங்கிரஸ் குறித்தும் தற்போதைய மத்திய பாஜக அரசு குறித்தும் பிரணாப் முகர்ஜி எழுதியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் மற்றும் மகள் ஷர்மிஸ்தா சண்டை காரணமாக The Presidential Years புத்தகம் வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :