தங்கக் கடத்தல் வழக்கு கேரள முதல்வரின் செயலாளர் மத்திய அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆஜர்

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் 4 முறை நோட்டீஸ் கொடுக்கப்பட்ட பின்னர் கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளர் ரவீந்திரன் இன்று கொச்சியில் உள்ள மத்திய அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷுடன் நெருக்கமாக இருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் மத்திய புலனாய்வுத் துறை, சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் பல முறை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிவசங்கருக்கு தங்கக் கடத்தல் மட்டுமில்லாமல் மேலும் பல்வேறு முறைகேடுகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் இந்த முறைகேடுகளில் முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளரான ரவீந்திரன் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக சிவசங்கர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதையடுத்து ரவீந்திரனிடம் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத் துறை தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி ரவீந்திரனுக்கு மத்திய அமலாக்கத் துறை நோட்டீஸ் கொடுத்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தனக்கு கொரோனா இருப்பதாகக் கூறி மருத்துவமனையில் சேர்ந்தார். சில நாள் சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார். இதன் பிறகு கடந்த மாதம் 2வது முறையாக மத்திய அமலாக்கத் துறை அவருக்கு நோட்டீஸ் கொடுத்தது.ஆனால் அப்போதும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் உடல் நலமில்லை என்று கூறி மருத்துவமனையில் சேர்ந்தார். இதன் பின்னர் வீடு திரும்பிய ரவீந்திரனுக்கு அமலாக்கத் துறை 3வது முறையாக நோட்டீஸ் கொடுத்தது. அப்போதும் விசாரணைக்கு ஆஜராகாமல் அவர் மருத்துவமனையில் சேர்ந்தார். விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காகவே ரவீந்திரன் நாடகமாடுகிறார் எனப் பரவலாகக் கூறப்பட்டது.

இதையடுத்து அவர் கைது செய்யப்படலாம் எனவும் கருதப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இன்று (17ம் தேதி) விசாரணைக்கு ஆஜராகக் கூறி 4வது முறையாக ரவீந்திரனுக்கு மத்திய அமலாக்கத் துறை நோட்டீஸ் கொடுத்தது. இன்றும் விசாரணைக்கு ஆஜராகா விட்டால் அவர் கைது செய்யப்படுவார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை ரவீந்திரன் கொச்சியில் உள்ள மத்திய அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ரவீந்திரன் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :