இளம் நடிகையிடம் சில்மிஷம்... 2 வாலிபர்களின் போட்டோக்களை வெளியிட போலீசார் முடிவு

கொச்சியில் பிரபல மலையாள இளம் நடிகை அன்னா பென்னிடம் வணிக வளாகத்தில் வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களின் புகைப்படங்களை வெளியிட கொச்சி போலீசார் தீர்மானித்துள்ளனர்.மலையாள சினிமாவில் முன்னணியில் உள்ள இளம் நடிகைகளில் ஒருவர் அன்னா பென். இவர் கடந்த இரு வருடங்களுக்கு முன் பகத் பாசில் நடித்த கும்பளங்கி நைட்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின்னர் ஹெலன் கப்பேளா ஆகிய படங்களிலும் நாயகியாக நடித்தார். இந்த மூன்று படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டுகளாக ஓடின. இதனால் இவர் மலையாள சினிமாவின் அதிர்ஷ்ட நாயகியாக மாறினார். தற்போது இவர் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது தங்கை மற்றும் தாயுடன் கொச்சியில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்திற்கு சென்றார். அப்போது அங்கு வைத்து 2 வாலிபர்கள் நடிகை அன்னா பென்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதில் அவர் அதிர்ச்சியடைந்தார். அவர் சுதாரிப்பதற்குள் இரண்டு வாலிபர்களும் அங்கிருந்து மாயமானார்கள். இந்த சம்பவம் குறித்து நடிகை அன்னா பென் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து அவர் போலீசில் புகார் எதுவும் செய்யவில்லை. ஆனால் இது குறித்து அறிந்த கொச்சி களமசேரி போலீசார் நடவடிக்கை எடுக்க தீர்மானித்தனர். இதையடுத்து சம்பவ நடந்த வணிக வளாகத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பரிசோதித்தனர். இதில் 2 வாலிபர்கள் அன்னா பென்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது புகைப்படங்களை போலீசார் சேகரித்தனர். இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்களது பெயர், விவரம் குறித்து எதுவும் தெரியவில்லை. இதையடுத்து இருவரது புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட போலீசார் தீர்மானித்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :