கோலிவுட்டில் பெருகும் இரட்டை ஹீரோக்கள் படம்..

by Chandru, Dec 19, 2020, 15:36 PM IST

கோலிவுட்டில் தற்போது இரட்டை ஹீரோக்கள் படங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஆர்யா. விஷால் இது நடிக்கும் படம் எனிமி என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதையடுத்து ஸ்ரீகாந்த், வெற்றி இணைந்து புதிய படத்தில் நடிக்கின்றனர். அந்த வரிசையில் மற்றொரு படம் உருவாகிறது.ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் பரோல். துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே "காதல் கசக்குதய்யா" படத்தை இயக்கியவர்.

பரோல் படத்தில் பீச்சாங்கை படத்தில் நடித்த கார்த்திக் மற்றும் சேதுபதி, சிந்து பாத் படத்தில் நடித்த லிங்காவும் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மோனிஷா மற்றும் கல்பிக்கா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். மேலும் வினோதினி, ஜானகி சுரேஷ், டி.கே.ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் பரோல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். படத்தின் போஸ்டரும், மோஷன் போஸ்டரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமன்றி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.

பரோல் படத்தைப் பற்றி இயக்குனர் துவாரக் ராஜா கூறுகையில், “இது நான் இரண்டாவது முறையாக இயக்கும் படம். 48 மணிநேரத்தில் வியாசர் பாடியில் ஆரம்பிச்சு திருச்சி, மதுரை சென்று திரும்பி விக்ர வாண்டி, சேலையூர், வியாசர் பாடி வந்து முடியும் கதை. க்ரைம், திரில்லர், ஆக்ஷன் என கமர்ஷியாக உருவாக்கி இருக்கிறோம். டைட்டில் பரோல்- என்பதால் நிறையப் பேர் இதை அரசியல் படமா என்று கேட்கிறார்கள். இது பரோல் சம்பந்தமான அரசியல் பேசுற அரசியல் அல்லாத படமாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.
ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் பரோல்' திரைப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.பரோல் படத்தின் ஓளிப்பதிவை மகேஷ் திருநாவுக்கரசு ஏற்றிருக்கிறார். ராஜ்குமார் அமல் இசை அமைக்கிறார். முனீஸ் எடிட்டிங் செய்கிறார்.
பரோல் படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

You'r reading கோலிவுட்டில் பெருகும் இரட்டை ஹீரோக்கள் படம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை