நடிகை பலாத்கார வழக்கு 21ம் தேதி அப்ரூவர் ரகசிய வாக்குமூலம்

பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அப்ரூவராக மாறியவரின் ரகசிய வாக்குமூலத்தைப் பெறத் தனி நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதையடுத்து 21ம் தேதி (நாளை மறுநாள்) அவர் ரகசிய வாக்குமூலம் அளிக்க உள்ளார்.பிரபல மலையாள முன்னணி நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடும் சர்ச்சைக்கு இடையே தற்போது இந்த நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தனி நீதிமன்றம் ஒருதலைபட்சமாக விசாரணை நடத்துவதாகப் பாதிக்கப்பட்ட நடிகை புகார் கூறினார். நடிகை மட்டுமில்லாமல் அரசுத் தரப்பிலும் இதே புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டு வாரங்கள் விசாரணையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் விசாரணை நீதிமன்றத்தை மாற்ற உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து இதே கோரிக்கையை வலியுறுத்தி கேரள அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றமும் விசாரணை நீதிமன்றத்தை மாற்ற மறுத்துவிட்டது. விசாரணை நீதிமன்றத்தை மாற்றுவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த காசர்கோட்டைச் சேர்ந்த விபின் லால் என்பவர் அப்ரூவராக மாறினார். இவர் நடிகைக்கு ஆதரவாகச் சாட்சி சொல்லத் தீர்மானித்துள்ளார். இந்நிலையில் நடிகைக்கு ஆதரவாகச் சாட்சி சொல்லக்கூடாது என்று அவரை மிரட்டியதாகக் கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவும், நடிகருமான கணேஷ் குமாரின் உதவியாளர் பிரதீப்குமார் என்பவர் மீது புகார் கூறப்பட்டது இதையடுத்து பிரதீப்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அப்ரூவர் விபின்லாலிடமிருந்து ரகசிய வாக்குமூலம் பெறத் தனி நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்படி வரும் 21ம் தேதி அவர் ரகசிய வாக்குமூலம் அளிக்க உள்ளார். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :