குத்தாட்டம் போட்ட நடன அழகிகளுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்த காவல் அதிகாரி
மேடையில் நடனமாடிய கவர்ச்சி நடனத்தின் போது பணியில் இருந்த காவலர்கள் பணத்தை வாரி வழங்கியதை அடுத்து அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேடையில் நடனமாடிய கவர்ச்சி நடனத்தின் போது பணியில் இருந்த காவலர்கள் பணத்தை வாரி வழங்கியதை அடுத்து அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் உள்ள மத்னாப்பூர் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாள் விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் கடைசி நாளில் பொது மேடையில் கவர்ச்சி நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. பெண்கள் மேடையில் ஆடிக்கொண்டிருந்தனர்.
அப்போது நடன நிகழ்ச்சிக்காக பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டிருந்த காவலர் மேடையில் ஏறி நடனமாடுபவர்களுக்கு மத்தியில் சென்றார். மேலும், தங்கள் கையில் இருந்த பணத்தை நடன அழகிகள் வாரி வழங்கினார்.
இந்தக் காட்சிகளை கூட்டத்தில் இருந்தவர்கள் செல்போன் மூலமாக வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பரவவிட்டனர். இந்த வீடியோ சில தினங்களில் வைரலான நிலையில், தற்போது அந்த வீடியோவில் இருக்கும் துணை ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading குத்தாட்டம் போட்ட நடன அழகிகளுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்த காவல் அதிகாரி Originally posted on The Subeditor Tamil
More India News