சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும். நாளையுடன் இவ்வருட மண்டலக் காலம் நிறைவடைகிறது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மண்டலக் கால பூஜைகளுக்காக நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. 41 நாள் நீளும் மண்டலக் காலம் நாளை நடைபெற உள்ள மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது.

கொரோனா பரவல் காரணமாக இவ்வருடம் சபரிமலை பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மண்டலக் கால பூஜைக்கு நடை திறந்த போது தொடக்கக் கட்டத்தில் வார நாட்களில் 1,000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2,000 பக்தர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வழக்கமாக மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில் தான் சபரிமலையில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இம்முறை பெரும்பாலானோருக்குச் சபரிமலை செல்ல முடியாததால் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து 2வது கட்டத்தில் வார நாட்களில் 2,000 பேரும், சனி, ஞாயிறுகளில் 3,000 பேரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த வாரம் பக்தர்களின் எண்ணிக்கையை 5 ஆயிரமாக உயர்த்தி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களாக 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது. மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த தங்க அங்கி பத்தனம் திட்டா மாவட்டம் ஆரன் முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன் ஊர்வலமாகச் சபரிமலைக்குப் புறப்பட்டது. இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த தங்க அங்கி பம்பையை அடையும்.

பம்பை கணபதி கோவிலில் 3 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்காகத் தங்க அங்கி வைக்கப்படும். மீண்டும் ஊர்வலமாகப் புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை அடைந்து பின்னர் ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்படும். இதன் பின்னர் தீபாராதனை நடைபெறும். நாளை பகல் 11.40க்கும் 12.20க்கும் இடையே பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும். இதன் பின்னர் இரவு 9 மணியளவில் கோவில் நடை சாத்தப்படும். நாளையுடன் இவ்வருட மண்டலக் காலம் நிறைவடையும். மீண்டும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகர விளக்குப் பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெறும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :