கோயில்களில் தாக்குதல்.. திட்டமிட்ட அரசியல் சதி.. ஜெகன்மோகன் குற்றச்சாட்டு..

கோயில் சிலைகளை சேதப்படுத்துவதன் மூலம் திட்டமிட்டு, ஒரு அரசியல் கொரில்லா போர் நடக்கிறது என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறைமுகமாக பாஜகவை தாக்கியுள்ளார். ஆந்திராவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த வாரம், விஜயநகரத்தில் 400 ஆண்டு பழமைவாய்ந்த ராமர்தீர்த்தம் கோயிலில் இருந்த ராமர் சிலை உடைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக, விஜயவாடாவில் நேரு பஸ் நிலையம் அருகே சீதா தேவி சிலை உடைந்து காணப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர் கோயில் தேர் தீ வைக்கப்பட்டு எரிந்தது.

கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களில் ஜெகன் அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, பாஜகவும், அதன் கூட்டணி கட்சியான ஜனசேனாவும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போலீஸ் மாநாட்டில் முதல்வர் ஜெகன் மோகன் பேசியதாவது: ஆந்திராவில் தற்போது கோயில் சிலைகளை சேதப்படுத்துவதன் மூலம் திட்டமிட்டு, ஒரு புதிய மாடல் அரசியல் கொரில்லா போர் நடக்கிறது. அரசியல் உள்நோக்கத்துடன் கோயில்களும், சிலைகளும் சேதப்படுத்தப்படுகின்றன. ஆள் அரவமில்லாத பகுதிகளில் உள்ள கோயில்களில் சிலைகள் சேதப்படுத்தப்படுகின்றன. அதன்பின்பு, சில எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன.

அதை சில மஞ்சள் பத்திரிகைகள் பூதாகரமாக்கி செய்தி வெளியிடுகின்றன.
சிலர் கடவுளின் பெயரால் அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கு கடவுளின் மீதும், பக்தியின் மீதும் எந்த பயமும் கிடையாது. அவர்கள் மனிதத்தன்மை அற்றவர்கள்.
இவ்வாறு ஜெகன்மோகன் பேசினார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கோயில்கள் தாக்கப்பட்டால் யாருக்கு லாபம்? எந்த கட்சிக்கு அரசியல்ரீதியாக லாபம் கிடைக்கும்? திட்டமிட்டு தாக்குதல் நடப்பதற்கு என்ன காரணம்? இந்த சம்பவங்களை குறிப்பிட்டு போலி பிரச்சாரங்களை மேற்கொள்வது யார்? அரசின் நல்ல திட்டங்களை மறைத்து, அரசுக்கு களங்கம் விளைவிப்பது யார்? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :