டெல்லி அரசின் திடீர் உத்தரவால் இங்கிலாந்திலிருந்து வந்த பயணிகள் கடும் அவதி

கொரோனா நெகட்டிவ் ஆனாலும் வீட்டு தனிமைக்கு முன்பாக ஒரு வாரம் அரசு முகாமில் தனிமையில் இருக்க வேண்டும் என்ற டெல்லி அரசின் திடீர் உத்தரவால் இங்கிலாந்திலிருந்து இன்று இந்தியா வந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர். விமான நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பின்லாந்து உட்பட பல நாடுகள் இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்திய விமானங்கள் டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 7ம் தேதி (நேற்று) வரை சர்வீசை நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் தடைக்கு பின்னர் இன்று இங்கிலாந்தில் இருந்து முதல் விமானம் டெல்லிக்கு வந்தது.

இந்த விமானத்தில் 250 பயணிகள் இருந்தனர். டெல்லி பயணிகள் மட்டுமில்லாமல் தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகளும் இந்த விமானத்தில் இருந்தனர். இங்கிலாந்திலிருந்து டெல்லி வரும் பயணிகள் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ஆனால் 7 நாட்கள் அவர்களது வீடுகளில் தனிமையில் இருக்க வேண்டும் என்று டெல்லி அரசு முன்னர் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று திடீரென ஒரு புதிய உத்தரவை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்தார். அதில் கொரோனா நெகட்டிவ் ஆனாலும் 7 நாட்கள் அரசு முகாமில் தனிமையில் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். டெல்லி மக்களை உருமாறிய கொரோனா வைரசிலிருந்து பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இன்று விமானம் டெல்லியை அடைந்த பின்னர் தான் இந்த விவரம் பயணிகளுக்கு தெரியவந்தது. இங்கிலாந்தில் விமானம் ஏறுவதற்கு முன் கொரோனா பரிசோதனை நடத்தி நெகட்டிவ் ஆனவர்கள் டெல்லியில் இறங்கியவுடன் தங்களது வீடுகளுக்கு சென்று விடலாம் என கருதி வந்த வெளிமாநில பயணிகள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமால் கடும் அவதியடைந்தனர். கொரோனா நெகட்டிவ் ஆனவர்களும் ஒரு வாரம் டெல்லியில் உள்ள அரசு முகாமில் தனிமையில் இருக்க வேண்டும் என்று விமான நிலையத்திலிருந்த சுகாதார துறை அதிகாரிகள் கூறினர். இதைக் கண்டித்து வெளிமாநில பயணிகள் விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :