புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சாந்தா மரணம்... பிரதமர் மோடி இரங்கல்

புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சாந்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது பணிகள் என்றென்றும் நினைவு கூறப்படும் என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், புற்றுநோய் சிகிச்சை நிபுணருமான டாக்டர் சாந்தா இன்று(ஜன.19) மரணமடைந்தார். அவருக்கு வயது 93. அவர் கடந்த பல ஆண்டுகளாக ஏழை நடுத்தர மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை அளிப்பதில் அரும்பணியாற்றியவர். இதய நோய் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் சாந்தா சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் காலமானார். டாக்டர் சாந்தாவின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டாக்டர் சாந்தா புற்றுநோய் மருத்துவத் துறையில் ஆற்றிய பணிகள் என்றென்றும் நினைவு கூறத்தக்கவை. ஏழை கீழ்த்தட்டு மக்களுக்கு சென்னை அடையார் புற்றுநோய் சிகிச்சை மையம் ஆற்றி வரும் பணிகள் பாராட்டத்தக்கவை. டாக்டர் சாந்தாவின் மரணம் வருத்தம் அளிக்கிறது. ஓம் சாந்தி என்று கூறியிருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், டாக்டர் சாந்தாவின் மறைவு மருத்துவ துறைக்கும், தமிழகத்துக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும் அவரது சிகிச்சை முறைகள் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கும்.

அவரை இழந்து வாடும் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன். சாந்தாவின் நற்பெயருக்கு பெருமை சேர்க்கும் விதத்திலும், அவர் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையிலும் காவல் துறை மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வேதனையுற்றேன். மருத்துவ உலகிற்குப் பேரிழப்பு. ஏழைகளும் புற்றுநோய்க்கு எளிதில் சிகிச்சை பெற அர்ப்பணிப்புடன் உழைத்தவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds