கர்நாடகா கல்குவாரியில் பயங்கர குண்டுவெடிப்பு.. 8 பேர் பரிதாபச் சாவு..

கர்நாடகாவில் ஒரு கல்குவாரியில் நள்ளிரவில் பயங்கர குண்டுவெடித்து 8 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் எனக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவின் சொந்த மாவட்டமான சிவமோகாவில் ஹுனாசோன்டி என்ற கிராமத்தின் அருகே ரயில்வே கல்குவாரி உள்ளது. இங்கு நேற்று(ஜன.21) இரவு 10.30 மணியளவில் பயங்கர குண்டுவெடித்தது. இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

குவாரியில் மேலும் குண்டுகள் வெடிக்கலாம் என்ற அச்சம் காரணமாக அந்த பகுதி முழுவதையும் சீல் வைத்து யாரையும் விடாமல் தடுத்தனர். தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். போலீஸ் கூடுதல் டிஜிபி பிரதாப் ரெட்டி கூறுகையில்,குவாரிக்கு தேவையான டைனமைட் குச்சிகள்(ஜெலட்டின்) அடங்கிய சரக்கு லாரியில் தான் திடீரென வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. சரக்கு லாரி உருக்குலைந்து காணப்படுகிறது.

எனினும் அதிலிருந்த வெடிபொருட்கள்தான் வெடித்தனவா அல்லது அங்குள்ள குடோனில் வெடித்ததா என்று தெரியவில்லை. மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்பதால் மீட்புப் பணிகளை இருளில் மேற்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார்.இந்த குண்டுவெடிப்பில் இது வரை 8 பேர் பலியாகியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த முதல்வர் எடியூரப்படா உத்தரவிட்டுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds