கேரளாவுக்கு கள்ளநோட்டு கடத்தல் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் கைது

கேரளாவில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக கடத்திச் சென்ற தமிழகத்தை சேர்ந்த 6 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 3 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டன. தேனி, கம்பம் வழியாக தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு பெருமளவு கள்ள நோட்டுகள் கடத்தப்படுவதாக இடுக்கி மாவட்ட எஸ் பி கருப்பசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழக-கேரள எல்லையான குமுளி பகுதியில் கண்காணிப்பை அதிகரிக்க அவர் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த சில தினங்களாக தமிழக-கேரள எல்லையில் போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த விசாரணையில் கேரளாவுக்கு கள்ளநோட்டுகளை கடத்தும் தமிழ்நாட்டு கும்பல் குறித்து போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கும்பலுக்கு போலீசார் வலை விரித்தனர். அந்த கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் அணுகினார். தனக்கு கள்ளநோட்டு வேண்டுமென்றும் உடனடியாக கொண்டு வந்தால் உரிய பணம் தருவதாகவும் அவர் கூறினார். இதை அந்த கும்பலைச் சேர்ந்தவர் நம்பியுள்ளார். இதன்படி கார் மற்றும் பைக்குகளில் 6 பேர் கள்ளநோட்டுகளுடன் குமுளி பகுதிக்கு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு மாறுவேடத்தில் பதுங்கி இருந்தனர். அவர்கள் வந்த கார் மற்றும் பைக்கை மறித்து போலீசார் நடத்திய சோதனையில் காரின் ரகசிய அறையில் வைத்திருந்த 3 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக அந்த கும்பலை சேர்ந்த செபஸ்டியன் (42), கோவையை சேர்ந்த முத்துவேந்திரன் (43), சுருளிராஜன் (32), சின்னமனூர் பகுதியை சேர்ந்த மகாராஜன் (32), கம்பத்தைச் சேர்ந்த மணியப்பன் (30), வீரபாண்டியை சேர்ந்த பாண்டி (53), மற்றும் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த சுப்பையன் (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்தக் கும்பல் கடந்த பல மாதங்களாக கள்ளநோட்டுகளை கேரளாவுக்கு கடத்தி சென்று புழக்கத்தில் விட்டது விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்கு பின் போலீசார் 6 பேரையும் கட்டப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
Tag Clouds

READ MORE ABOUT :