மத்திய அரசு உத்தரவிட்ட போதிலும் கேரளாவில் சினிமா தியேட்டர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி

பிப்ரவரி 1 முதல் சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளிலும் ரசிகர்களை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை இப்போதைக்கு கேரளாவில் அமல்படுத்த வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நோய் பரவல் கடுமையாக இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 8,635 பேருக்கு நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 8 மாதங்களில் இது மிகக் குறைந்த எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிப்ரவரி 1 முதல் லாக் டவுன் நிபந்தனைகளில் மேலும் தளர்வுகளை ஏற்படுத்த மத்திய அரசு தீர்மானித்தது. இதன்படி அனைத்து மாநிலங்களிலும் சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளிலும் நிபந்தனைகளுடன் ரசிகர்களை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தியேட்டர்களை திறக்கக் கூடாது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தியேட்டருக்கு வரும் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பின்னரே தியேட்டருக்குள் அனுமதிக்க வேண்டும். உணவு ஸ்டால்களை திறக்கலாம் என்றாலும், டிஜிட்டல் முறையில் மட்டுமே பண பரிமாற்றம் செய்ய வேண்டும். ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னரும் தியேட்டரை கிருமி நாசினி தெளித்து தூய்மை செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் 100 சதவீதம் பேரை அனுமதிப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதன்படி ஒரு சில மாநிலங்களில் தியேட்டர்களில் 100 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கேரளாவில் தற்போதைக்கு தியேட்டர்களில் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில மாதங்களாக நோய் பரவல் கடுமையாக இருப்பது தான் இதற்கு காரணமாகும். தற்போதைய சூழ்நிலையில் தியேட்டரில் முழு கொள்ளளவு ஆட்களை அனுமதிப்பது நோய் பரவலை மேலும் அதிகரிக்கும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :