சமூக வலைதளங்களில் அவதூறு பெண் டப்பிங் கலைஞரின் புகாரில் சினிமா டைரக்டர் கைது

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறி மலையாள சினிமா டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக பிரபல மலையாள சினிமா டைரக்டர் சாந்திவிளை தினேஷை போலீசார் கைது செய்தனர்.
மலையாள சினிமாவில் பிரசித்தி பெற்ற டப்பிங் கலைஞராக இருப்பவர் பாக்கியலட்சுமி. 1978ல் ரேணு சந்திரா என்ற நடிகைக்காக திரநோட்டம் என்ற படத்தில் இவர் முதன்முதலாக டப்பிங் பேசினார். இதன் பின்னர் இதுவரை இவர் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் ஷோபனா, ரேவதி, நதியா, ஊர்வசி, கனகா, வாணி விஸ்வநாத், மீனா உள்பட ஏராளமான நடிகைகளுக்கு மலையாள சினிமாவில் டப்பிங் பேசியுள்ளார்.

நடிகை ஷோபனாவுக்கு தான் இவரை அதிகபட்சமாக 33 படங்களில் டப்பிங் கொடுத்துள்ளார். ஊர்வசிக்கு 23 படங்களிலும், வாணி விஸ்வநாத்துக்கு 12 படங்களிலும், சம்யுக்தா வர்மாவுக்கு 11 படங்களிலும், கனகாவுக்கு 10 படங்களிலும் இவர் டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.இந்நிலையில் இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில் மலையாள சினிமா டைரக்டர் சாந்திவிளை தினேஷ் தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிடுவதாகவும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த சைபர் கிரைம் போலீசார் டைரக்டர் சாந்திவிளை தினேஷுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். அவரை போலீசார் நேரில் வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பாக்கியலட்சுமிக்கு எதிராக மீண்டும் அவர் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாக்கியலட்சுமி மீண்டும் திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் டைரக்டர் சாந்திவிளை தினேஷை கைது செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் யூடியூபில் பெண்கள் குறித்து ஆபாசமான கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒருவரைப் பாக்கியலட்சுமி தலைமையில் மூன்று பெண்கள் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds