பேஸ்புக் நண்பரை சந்திக்க வந்தவருக்கு கோடீஸ்வரன் பட்டம்: கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

பேஸ்புக் நண்பரை சந்திக்க வந்தவருக்கு கோடீஸ்வரன் பட்டம் வழங்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் புத்தலத்தானி பரவன்னூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் பேஸ்புக் மூலம் பலரிடம் பழகி வந்துள்ளார். அந்த வகையில், பிரபாகரனுக்கு கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சோகன் ஹல்ராம் என்பவர் நண்பனாக கிடைத்துள்ளார். இருவரும் நல்ல நண்பர்களாகப் பழகிய நிலையில், நட்பு காரணமாகத் தனது ஊருக்கு வருமாறு சோகனை பிரபாகரன் அழைத்துள்ளார்.

நண்பனின் அழைப்பை ஏற்று சோகன் தனது குடும்பத்தினருடன் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் வந்து நண்பன் பிரபாகரனின் வீட்டில் தங்கியுள்ளார். தொடர்ந்து, இரு குடும்பத்தினரும் கேரளாவில் உள்ள பல்வேறு சுற்றலா தலங்களுக்கு சென்று மகிழ்வித்துள்ளனர். அப்போது இருவரும் தாங்கள் செய்து வரும் தொழில் குறித்து மனம் விட்டுப் பேசினர். எதிர்காலத்தில் தொழிலை எப்படி எல்லாம் கொண்டு செல்லலாம் எனவும் பேசினார்கள்.

அப்போது பிரபாகரன் தனது லாட்டரி ஏஜென்சி தொழில் குறித்து சோகனிடம் எடுத்துரைத்துள்ளார். இதனையடுத்து, சோகன், நண்பன் பிரபாகரன் மூலமாக ரூ.5 க்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை வழங்கக்கூடிய லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.

தொடர்ந்து, கேரளாவில் இருந்து சொந்த ஊரான கர்நாடாவிற்கு குடும்பத்தினருடன் சோகன் சென்றுள்ளார்.

இதற்கிடையே, சோகன் வாங்கிய ரூ.5 லாட்டுச்சீட்டுக்கு ரூ.1 கோடி விழுந்துள்ளது. இந்த தகவலை சோகனுக்கு பிரபாகரன் தெரிவித்துள்ளார். இருப்பினும், இதனை நம்பாத சோகன், சற்று நேரத்தில் சொர்க்கத்திற்கு சென்று வந்து விட்டார்.
உடனே அவர்களைத் திரும்ப வருமாறு பிரபாகரன் அழைத்த நிலையில், சோகன் குடும்பத்தினர் பிரபாகரனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். பேஸ்புக் நட்பு மூலம் கோடீஸ்வராக ஒருவர் மாறியுள்ள செய்தி சமூக வலைதளத்தில் பரவி தற்போது, வைரலாகி வருகிறது. ரூ.100 கடன் பெற்ற நண்பனை கொலை செய்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், ரூ.1 கோடி லாட்டரி விழுந்தை பேஸ்புக் நண்பனுக்கு தெரிவித்த பிரபாகரன் உள்ளிட்ட சிலர் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது என்று பேசப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :