சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்

சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று ராஜ்ய சபாவில் தெரிவித்தார்.டெல்லியில் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்று வரும் விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அதில் 583 கணக்குகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டன.

பத்திரிகை நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் டுவிட்டர் கணக்குகளை ரத்து செய்தால் அது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதாகி விடும் என்று டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. உடனடியாக தாங்கள் தெரிவித்த அனைத்து கணக்குகளையும் ரத்து செய்யாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசு டுவிட்டர் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்தியாவில் உள்ள டுவிட்டர் நிறுவன அதிகாரிகளைக் கைது செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.டுவிட்டர் நிறுவனத்தின் சொந்த சட்டங்கள் என்னவாக இருந்தாலும் இந்தியாவில் செயல்படும் போது இந்தியாவின் சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று ராஜ்யசபாவில் கூறியது: சமூக வலைத்தளங்களை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். சாதாரண மக்களுக்கு அவை பெரும் உதவியாக இருக்கிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் சமூக வலைத் தளங்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. ஆனாலும் போலியான செய்திகளைப் பரப்புவதற்கும், கலவரத்தைத் தூண்டுவதற்கும் வலைத்தளங்களைப் பயன்படுத்துவதை எந்தக் காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds