அஞ்சு வருஷத்துக்கு மழையே வரக்கூடாது.. உளறிவிட்ட மேயர் விளக்கம்..

ஐதராபாத்துக்கு இன்னும் 5 வருஷத்துக்கு மழையே வரக் கூடாது என்று கடவுளை வேண்டுவதாகக் கூறிய மேயர் விஜயலட்சுமி அதற்கு விளக்கம் அளித்தார்.
தெலங்கானாவில் முதலமைச்சர் கே.சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி(டிஆர்எஸ்) கட்சி ஆட்சி நடைபெறுகிறது. அதன் தலைநகர் ஐதராபாத் மாநகராட்சியில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. பஞ்சாரா ஹில்ஸ் வார்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட விஜயலட்சுமி, டிஆர்எஸ் கட்சியின் சார்பில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிப்.12ம் தேதி அவர் பதவியேற்றதும், அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர்.

அப்போது, சமீபத்தில் ஐதராபாத்தில் ஏற்பட்ட மழைவெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிப்பது பற்றி மேயர் விஜயலட்சுமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த போது, நான் பதவியில் இருக்கும் வரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐதராபாத்தில் மழையே வரக் கூடாது என்று கடவுளிடம் வேண்டுகிறேன் என்று கூறினார். சிலர் பேட்டியின் இந்த ஒரு பகுதியை மட்டும் எடிட் செய்து, சமூக ஊடகங்களில் வைரலாக பரப்பினர். இதையடுத்து, விஜயலட்சுமி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ஐதராபாத்தில் கடந்த காலத்தில் மழைவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சொல்லும் போது, இனி அப்படியொரு வெள்ளம் வரக் கூடாது என்ற அர்த்தத்தில்தான் நான் பேசினேன் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.விஜயலட்சுமி கடந்த ஜனவரியில் தாசில்தார் சீனிவாஸ் என்பவரிடம் தகராறு செய்திருந்தார். தற்போது விஜயலட்சுமி மேயராக பதவியேற்றதும் அந்த தாசில்தார் வேறு பணிக்கு மாற்றப்பட்டார். இதுவும் ஐதராபாத் அரசியலில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :