திருப்பதி கோவில் சிறப்பு தரிசன டோக்கன் இன்று ஆன்லைன் மூலம் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டோக்கன் ஆன்லைன் மூலம் இன்று வெளியீட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது

by Balaji, Feb 20, 2021, 10:24 AM IST

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இதுகுறித்து குறிப்பிட்டுள்ளதாவது: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணியளவில் www.tirupathibalaji.ap.gov.in
என்ற திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.அதேபோல் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலை, திருப்பதியில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் தங்கி ஓய்வெடுக்க, 22-ந்தேதி மாலை 3 மணியளவில் காலியாக உள்ள அறைகளின் விவரமும் ஆன்லைன் மூலமாக வெளியிடப்படுகின்றன. எனவே அறைகள் தேவைப்படும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாட்களில் திருமலை, திருப்பதிக்கு வந்து, தாங்கள் முன்பதிவு செய்த அறைகளில் தங்கி ஓய்வெடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

You'r reading திருப்பதி கோவில் சிறப்பு தரிசன டோக்கன் இன்று ஆன்லைன் மூலம் வெளியீடு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை