கங்கனா ரனாவத்தை எதிர்த்து போராட்டம்.. நடிகையை ஆபாசமாக திட்டிய மாஜி மந்திரி..

by Chandru, Feb 20, 2021, 10:31 AM IST

நடிகை கங்கனா ரனாவத், மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர். எந்த பின்னணியும் இல்லாமல், திரையுலகில் சாதித்து பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் என்ற இடத்தையும் பிடித்தார். ரசிகர்கள் மத்தியில் அவரது படங்களுக்கு வரவேற்பு இருந்தது. சமீப காலமாக அந்த இமேஜ் மாறிவிட்டது. அவரது சர்ச்சை பேச்சுக்களும் நடவடிக்கைகளுமே இதற்குக் காரணம். அவரை சிறந்த நடிகை என்று பாராட்டிய நெட்டிசன்கள் இப்போது அவரை கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். அவர் சொல்லும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் எடுபடாததே இதற்குக் காரணம்.

மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினார், அது பிறகு கலவரமாக மாறியது. விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்துப் போராடிய விவசாயி களை பயங்கரவாதிகள் என்றும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் எதிர்க் கட்சிகளைத் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்றும் கங்கனா தெரிவித்தார். இது மக்களையும் விவசாயிகளையும் கோபத்தில் ஆழ்த்தியது.

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு எதிராகக் கடுமையான கருத்து தெரிவித்த கங்கனாவை முன்னாள் அமைச்சர் ஒருவர் ஆபாசமாக விமர்சித்தார். இது சினிமா துறையில் உள்ள சில பெண்களைப் பற்றிப் பயன்படும் ஒரு பாலியல் கருத்து. மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் அரசில் அமைச்சரவை பதவியில் இருந்த முன்னாள் அமைச்சர் சுக்தேவ் பான்சே, கங்கனா ரனவுத்தை "நாச்னி கானே வாலி" என்று குறிப்பிட்டார்.மேலும் கங்கனாவின் படப் பிடிப்பு நடந்த இடத்தில் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்துத் தாக்கியதாகக் கூறப்பட்டதையடுத்து சுக்தேவ் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார். விவசாயிகளுக்கு எதிராகக் கருத்து கூறிய கங்கனா மன்னிப்பு கோர வேண்டும் என்று படப்பிடிப்பு நடந்த இடத்தில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களைத் தடுத்து போலீசார் தாக்கினர் என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்குக் காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது. ஆனால் கங்கனா ரனாவத் தனது ட்வீட் மெசேஜ் மூலம் விவசாயிகளை அவமதித்தை காங்கிரஸ் கட்சி சுற்றிக்காட்டி அதற்காக கங்கனா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராடி வருகிறது.கங்கனா ரனாவத் ஏற்கனவே பலவேறு சர்ச்சை கருத்துக்கள் கூறியதில் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணையும் நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading கங்கனா ரனாவத்தை எதிர்த்து போராட்டம்.. நடிகையை ஆபாசமாக திட்டிய மாஜி மந்திரி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை