கங்கனா ரனாவத்தை எதிர்த்து போராட்டம்.. நடிகையை ஆபாசமாக திட்டிய மாஜி மந்திரி..

Advertisement

நடிகை கங்கனா ரனாவத், மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர். எந்த பின்னணியும் இல்லாமல், திரையுலகில் சாதித்து பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் என்ற இடத்தையும் பிடித்தார். ரசிகர்கள் மத்தியில் அவரது படங்களுக்கு வரவேற்பு இருந்தது. சமீப காலமாக அந்த இமேஜ் மாறிவிட்டது. அவரது சர்ச்சை பேச்சுக்களும் நடவடிக்கைகளுமே இதற்குக் காரணம். அவரை சிறந்த நடிகை என்று பாராட்டிய நெட்டிசன்கள் இப்போது அவரை கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். அவர் சொல்லும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் எடுபடாததே இதற்குக் காரணம்.

மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினார், அது பிறகு கலவரமாக மாறியது. விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்துப் போராடிய விவசாயி களை பயங்கரவாதிகள் என்றும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் எதிர்க் கட்சிகளைத் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்றும் கங்கனா தெரிவித்தார். இது மக்களையும் விவசாயிகளையும் கோபத்தில் ஆழ்த்தியது.

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு எதிராகக் கடுமையான கருத்து தெரிவித்த கங்கனாவை முன்னாள் அமைச்சர் ஒருவர் ஆபாசமாக விமர்சித்தார். இது சினிமா துறையில் உள்ள சில பெண்களைப் பற்றிப் பயன்படும் ஒரு பாலியல் கருத்து. மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் அரசில் அமைச்சரவை பதவியில் இருந்த முன்னாள் அமைச்சர் சுக்தேவ் பான்சே, கங்கனா ரனவுத்தை "நாச்னி கானே வாலி" என்று குறிப்பிட்டார்.மேலும் கங்கனாவின் படப் பிடிப்பு நடந்த இடத்தில் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்துத் தாக்கியதாகக் கூறப்பட்டதையடுத்து சுக்தேவ் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார். விவசாயிகளுக்கு எதிராகக் கருத்து கூறிய கங்கனா மன்னிப்பு கோர வேண்டும் என்று படப்பிடிப்பு நடந்த இடத்தில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களைத் தடுத்து போலீசார் தாக்கினர் என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்குக் காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது. ஆனால் கங்கனா ரனாவத் தனது ட்வீட் மெசேஜ் மூலம் விவசாயிகளை அவமதித்தை காங்கிரஸ் கட்சி சுற்றிக்காட்டி அதற்காக கங்கனா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராடி வருகிறது.கங்கனா ரனாவத் ஏற்கனவே பலவேறு சர்ச்சை கருத்துக்கள் கூறியதில் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணையும் நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>