லவ் ஜிஹாத்தை நிச்சயம் எதிர்ப்பேன்.. மெட்ரோ மேன் ஸ்ரீதரன்!

கேரளாவில் லவ் ஜிஹாத் மூலம் இந்து பெண்கள் ஏமாற்றப்படுவதாக பாஜகவில் இணையவுள்ள மெட்ரோ மேன் ஸ்ரீதரன் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் மெட்ரோ மேன் என்று அனைவராலும் அழைக்கப்படும் இ.ஸ்ரீதரன் தன்னை பாஜகவில் நாளை இணைத்துக்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். தனக்கு ஆளுநர் ஆகும் விருப்பம் இல்லை. ஆனால், எதிர்வரும் கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராகவும் களமிறங்கத் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இ.ஸ்ரீதரன், லவ் ஜிஹாத் குறித்து பேசியுள்ளார். கேரள மாநிலத்தில் லவ் ஜிஹாத் மூலம் என்ன நடக்கிறது என்பதை பார்க்கிறேன். கேரளாவில் உள்ள இந்து பெண்கள், திருமணத்தின் மூலம் ஏமாற்றப்படுவதை நேரில் பார்த்து வருகிறேன். ஒரு திருமணத்தில் இந்துக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள், அவர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதை பார்க்கிறேன்.

அதனால்தான் லவ் ஜிஹாத் என்ற கருத்தை எதிர்க்கிறேன் என்றார். இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவ சிறுமிகளும் லவ் ஜிஹாத் மூலம் ஏமாற்றப்படுகிறார்கள். எனவே, அந்த மாதிரியான ஒரு விஷயத்தை நான் நிச்சயமாக எதிர்ப்பேன் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, மாட்டு இறைச்சி குறித்து பேசிய இ.ஸ்ரீதரன், தனிப்பட்ட முறையில், நான் மிகவும் கண்டிப்பான சைவ உணவு உண்பவன். நான் முட்டைகளை கூட சாப்பிடுவதில்லை, நிச்சயமாக யாரும் இறைச்சி சாப்பிடுவதை நான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, ஸ்ரீதரன் அரசியல் வருகை குறித்து பேசுகையில், நான் ஆரம்பத்தில் இருந்தே பாஜக அனுதாபியாக இருந்தேன். குறிப்பாக நான் ஒரு மாணவனாக இருந்தபோது, ஆர்எஸ்எஸ் கூட்டங்களில் தீவிரமாக கலந்து கொண்டேன். இயற்கையாகவே நான் பாஜக கொள்கை எண்ணத்தில் வளர்ந்தவன். பாஜகவினர் நேர்மையானவர்களாகவும், இரக்கத்துடன் நாட்டிற்காகவும் உழைக்கும் மக்கள். அதனால்தான் இயற்கையாகவே எனது விருப்பம் பாஜகவாக இருந்தது.

ஆளுநராக வேண்டும் என்று கட்சியில் சேரவில்லை. அந்த பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டாலும் ஆளுநராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் முதல்வர் பதவி குறித்து கட்சி முடிவு செய்ய வேண்டும். நான் முதல்வர் முகமாக திட்டமிடப்பட்டால், கேரளாவின் இரு முனைகளிலும் மகிழ்ச்சியற்ற ஒரு பெரிய குழு நிச்சயமாக எங்களுடன் வரும் என்று நான் நினைக்கிறேன். ஒரு பெரிய புரட்சி இருக்கும் என்றும் நான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :