வெளிநாட்டு பயணிகளுக்கு சென்னை விமானத்தில் கொரானா பரிசோதனை கட்டாயம்

கொரானா இரண்டாவது அலை பரவுவதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குக் குரல் பரிசோதனை மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

by Balaji, Feb 24, 2021, 09:56 AM IST

கடந்த சில நாட்களாக நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிக அளவில் உள்ளது. சில வெளிநாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.இதைத்தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு உழவர்கள் கோரணா பரிசோதனை செய்து கொண்டதற்கான சான்றிதழ் உடன் வர வேண்டும் என்ற நிபந்தனை நடைமுறையில் உள்ளது.இதைத்தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு உழவர்கள் குரல் பரிசோதனை செய்து கொண்டதற்கான சான்றிதழ் உடன் வர வேண்டும் என்ற நிபந்தனை நடைமுறையில் உள்ளது. ஆனால் இப்படி பயணிகள் கொண்டுவரும் சான்றிதழ்கள் பல போலியானவை என்று சுகாதாரத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று காலை முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூா், மலேசியா நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் அந்தந்த நாடுகளில் எடுத்த கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மருத்துவ சான்றிதழைக் காட்டிவிட்டுச் செல்லலாம். ஆனால் துபாய், சார்ஜா, அபுதாபி, குவைத், சவுதி அரேபியா, ஓமன், கத்தார், வியட்நாம், இலங்கை, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ்கள் வைத்திருந்தாலும் சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கட்டாயமாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது

இந்த பரிசோதனைக்காக 1200 மட்டும் 2500 என இருவகைகளில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .1,200 ரூபாய் பரிசோதனைக்கு 6 மணியில் இருந்து 8 மணி நேரத்திற்குள் முடிவு கிடைக்கும். ரூ.2,500 ரூபாய் பரிசோதனைக்குச் செய்தால் 2 முதல் 4 மணி நேரத்திற்குள் முடிவு கிடைக்கும். பரிசோதனை முடிவுகள் வரும் வரை பயணிகள் சுகாதாரத்துறையினா் கண்காணிப்பில் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டும்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த பயணி உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொற்று இல்லை என்று முடிவு வந்தால் வீடுகளுக்கு அனுப்பித் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் .சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மீண்டும் கட்டாய கொரோனா பரிசோதனை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளிடையே பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

You'r reading வெளிநாட்டு பயணிகளுக்கு சென்னை விமானத்தில் கொரானா பரிசோதனை கட்டாயம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை