உபியில் வெடிபொருட்களுடன் கைதான பாப்புலர் பிரண்ட் தொண்டர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே ஒரு ரகசிய இடத்தில் இரண்டு பேர் பயங்கர வெடி பொருட்களுடன் பதுங்கியிருப்பதாக உளவுத் துறை போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 16ம் தேதி இரவு அந்த பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும், பாப்புலர் பிரண்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. அவர்களில் ஒருவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பெரோஸ்கான் என்றும், இன்னொருவர் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியைச் சேர்ந்த அன்சார் பதருதீன் என்றும் தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த சில முக்கிய தலைவர்களைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை உபி மாநில கூடுதல் போலீஸ் இயக்குனர் பிரசாந்த் குமார் தெரிவித்தார்.இந்நிலையில் கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரின் கேரளாவிலுள்ள வீடுகளில் உபி மாநில போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பந்தளத்தில் உள்ள அன்சாரின் வீட்டிலும் கோழிக்கோட்டில் உள்ள பெரோஸ்கானின் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. கேரள போலீஸ் உதவியுடன் 6 மணி நேரத்திற்கு மேல் நடத்தப்பட்ட இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :