எந்த சின்னத்தில் போட்டாலும் பாஜகவுக்கே ஓட்டு விழுகிறதாம்.. மேற்குவங்கத் தேர்தலில் புகார்..

மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜகவுக்கு விழுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மே2ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சி, மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறது. முக்கிய எதிர்க்கட்சியான பாஜக ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறது.

இந்நிலையில், முதல் கட்டத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் 30 தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மிட்னாப்பூர் மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் திரிணாமுல் கட்சியின் சின்னத்திற்கு வாக்களித்தாலும் விவிபேட் இயந்திரத்தில்(ஒப்புகைச் சீட்டு) பாஜக சின்னத்தைக் காட்டுவதாக புகார் எழுந்தது. எந்த சின்னத்திற்கு வாக்களித்தாலும் விவிபேட் இயந்திரத்தில் பாஜக சின்னமே தெரிவதாக சிலர் புகார் கூறினர்.

இதையடுத்து திரிணாமுல் கட்சியின் ஏஜென்டுகள் வாக்குவாதம் செய்தனர். இதனால், வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பிறகு வேறு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. இது பற்றி, பாஜக மாநில தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், மம்தா பானர்ஜிக்கும், திரிணாமுல் கட்சியினருக்கும் தோல்வி பயம் வந்து விட்டது. அதனால்தான் வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள் என்றார்.

இதற்கிடையே, திரிணாமுல் கட்சியினர் தலைமை தேர்தல் அதிகாரியைச் சந்தித்து ஒரு புகார் அளித்தனர். அதில் வாக்குச்சாவடிகளில் அந்தந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்டவர்களை மட்டுமே அரசியல் கட்சிகளின் ஏஜென்டுகளாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என்றும், 2வது கட்ட வாக்குப்பதிவில் அதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds