மேற்குவங்கத்தில் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலை

by Ari, Apr 21, 2021, 17:37 PM IST

மேற்குவங்கத்தல் 43 தொகுதிகளுக்கு நாளை 6 ஆம் கட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது.

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 5 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றுள்ள நிலையில், நாளை 6 ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து வரும் 26, 29 ஆகிய தேதிகளில் மீதமுள்ள இரண்டு கட்டத் தோ்தல்கள் நடைபெற உள்ளன.

6 ஆம் கட்டத் தோ்தல் நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணி வரை நடைபெறுகிறது.

53.21 லட்சம் ஆண் வாக்காளா்கள், 50.65 லட்சம் பெண் வாக்காளா்கள் என மொத்தம் 1.03 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். 14,480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேடு மற்றும் கொரோனா தடுப்பு சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பாத்திரமாக வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

6 ஆம், பாஜக தேசிய துணைத் தலைவா் முகுல் ராய், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா்களும், மாநில அமைச்சா்களுமான ஜோதிபிரியா மாலிக், சந்திரிமா பட்டாச்சார்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் தன்மே பட்டாச்சார்யா ஆகியோர் உள்பட மொத்தம் 306 வாக்காளா்கள் களத்தில் உள்ளனா்.

திரிணமூல் காங்கிரஸ் சார்பில் திரைப்பட இயக்குநா் ராஜ் சக்கரவா்த்தி, நடிகை கெளஷானி முகா்ஜி ஆகியோரும் இந்த ஆறாம் கட்டத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

6 ஆம் கட்ட வாக்குப்பதிவிற்காக 1,071 கம்பெனி மத்திய படைப் பிரிவினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

You'r reading மேற்குவங்கத்தில் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை