கொரோனாவால் இறந்தவர்களின் இறுதி சடங்கிற்கு கட்டணம் ரூ.1 மட்டுமே

தெலங்கானாவில் ரூ.1 கட்டணத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் இறுதி சடங்குகள் நடத்தப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை கொடூரமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இறுதி சடங்கில் கலந்து கொள்வதை தவிர்க்க விரும்புவதால் மருத்துவமனைகளில் சடலங்கள் குவிந்து கிடக்கின்றனர். அவற்றை சமூக சேவகர்கள் பெற்றுக்கொண்டு இறுதி சடங்கு செய்கின்றனர்.

கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய பொருளாதரம் உள்ள குடும்பங்கள் பணம் கொடுக்கின்றன. பொருளாதாரத்தில் நளிவடைந்தவர்களால் இடைத்தரகர்களுக்கும், ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் பணம் கொடுக்க முடியாத நிலை உள்ளது.

இது போன்ற கடினமான நேரத்தில் தெலங்கானாவின் கரீம்நகர் நகராட்சி அதிகாரிகள் கொரோனாவால் இறந்தவர்களின் இறுதி சடங்குகளை செய்ய முன்வந்துள்ளனர்.

கரீம்நகர் நகராட்சி ஆணையர் வள்ளூரி கிராந்தி கூறுகையைில்,

“ஆதார் அட்டையின் ஜெராக்ஸ் எடுப்பதற்காக ஒரு ரூபாய் வசூலிக்கிறோம். இது போன்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களை இறுதி சடங்குகள் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் நடுத்தர மனிதரை தவிர்க்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். மாநகராட்சி ஒரு ஒப்பந்தக்காரருக்கு ரூ.8 ஆயிரம் வழங்குகிறது. அதேசமயம் கொரோனாவால் இறந்த உடலாக இருந்தால் கூடுதல் தொகை வழங்கப்படுகிறது. இறந்தவரின் மரபுகள் மற்றும் மதங்களின்படி இறுதி சடங்குகள் செய்யப்படுகின்றன. கடந்த டிசம்பர் வரை 158 உடல்களுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டுள்ளது. அது முதல் இதுவரை கொரோனாவால் இறந்த 49 பேரின் உடல்களுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டுள்ளது “ என்று வள்ளூரி கிராந்தி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds