ஆக்சிஜன் உற்பத்தியை அடுத்து மருத்துவமனை.. பேரிடர் உதவியில் முன்னணி வகிக்கும் ரிலையன்ஸ்!

கொரோனா 2ம் அலை நாடு முழுவதும் கவலைகளை அதிகரித்துள்ளது. மேலும் குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை குறைக்க மகாராஷ்டிரா அரசுக்கு முகேஷ் அம்பானி கைகொடுக்க முடிவெடுத்துளளார். தனது ரிலையன்ஸ் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து மருத்துவத்துக்கு தேவைப்படும் மருத்துவ ஆக்ஸிஜன் 100 டன்னை மகாராஷ்ட்ரா அரசுக்கு கொடுக்க அம்பானி முடிவெடுத்துள்ளார். இதனை மகாராஷ்ட்ரா அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.

குஜராத் ஜாம்நகர் ஆலையில் தான் ஆக்ஸிஜன் உற்பத்தி நடந்து வருகிறது. இதே ஜாம்நகரில் தற்போது 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்ட முகேஷ் அம்பானியின் மனைவியான நீட்டா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் பவுண்டேசன் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஆக்சிஜனோடு கூடிய 1000 படுக்கைகள் கொண்ட இரண்டு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, இந்த வாரத்திற்குள் 400 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையும், அதற்கடுத்த இரண்டு வாரங்களில் 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையும், நிர்மாணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், மருத்துவ உதவி, உபகரணங்கள் உட்பட அனைத்து செலவுகளுமே ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மூலமாக ஏற்கப்படும். அதேநேரம் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் மட்டும் அரசு மூலம் நடத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :