தொழில் தொடங்குவோரில் 95% பேர் தோல்வி:நிதி ஆயோக் உறுப்பினர் வேதனை

இந்தியாவில் புதிதாக தொழில் தொடங்குவோரில் 95 சதவீதம் பேர் தோல்வியை சந்திப்பதாக நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராய் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள சர்வதேச நிர்வாகவியல் கல்வி மையத்தின் (ஐஎம்ஐ) பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற, நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராய் புதியதாக தொழில் தொடங்குபவர்கள் குறித்து வேதனையுடன் பேசினார்.
அப்போது அவர் மேலும் பேசியதாவது: பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ள ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் ஸ்டாண்ட் அப் இந்தியா ஆகிய திட்டங்கள் அனைத்தும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமானதல்ல. இது ஒவ்வொரு இந்தியனுக்குமானது. மலர்ந்து, காயாகி கனிந்து பலன் கொடுப்பதாகத்தான் இத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்திய கல்வி முறை மாணவர்கள் கேள்வி கேட்பதாக உருவாக்கப்படவில்லை. இதனாலேயே தொழில் முனைவை ஊக்குவிப்பதாக இல்லை என்ற சந்தேகம் உருவாகிறது.பெரிய நிறுவனங்களில் உள்ள தொழில் முனைவைவிட சாலையோர வியாபாரி மற்றும் விவசாயிகளிடம் அதிகம் உள்ளது. இந்தியாவின் தனி நபர் வருமானம் 1,800 டாலராகும். வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும்
இந்தியாவில் 1991-ம் ஆண்டிலிருந்தே தாராளமய கொள்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் தனி நபர் வருமானம் குறித்து சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்ட அறிக்கையில் தனி நபர் வருமான அளவானது வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள அளவில் பாதியை எட்டுவதற்கே 153 ஆண்டுகளாகும். ஆனால் சமீபத்தில் இந்தியா அடைந்து வரும் வளர்ச்சி, இதை எட்டுவதற்கு அவ்வளவு காலம் ஆகாது என்றே தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds