227 பயணிகளுடன் ஓடுதள விளக்கில் மோதிய விமானம்!
ஓடுதள விளக்கில் 227 பயணிகளுடன் மோதிய விமானம்
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 227 பயணிகளுடன் இலங்கை கொழும்புக்கு மாலை ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானம் கிளம்பியது.
அந்த விமானம் ஓடுதளத்தில் இருந்து மேலே எழும்பும்போது, விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தின் எல்லையில் இருக்கும் விளக்கில் பயங்கர சத்தத்துடன் மோதியது.
இதனைத் தொடர்ந்து, அந்த விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது. பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர்.
உடனடியாக, ஓடுதளம் மூடப்பட்டது, பின்னர் நிலைமை சீரானதும் திறக்கப்பட்டது. இந்த விபத்தில் விமானத்தின் சக்கரம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. இந்த சம்பவத்தால் கொச்சி விமான நிலையம் பரபரப்பாகக் காணப்பட்டது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading 227 பயணிகளுடன் ஓடுதள விளக்கில் மோதிய விமானம்! Originally posted on The Subeditor Tamil
More India News