உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நீர் - குமாரசாமி
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நீர் திறப்பு - குமாரசாமி
மழை நன்றாக பெய்தால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படும் என கர்நாடகா மாநில முதலமைச்சர் குமாரசாமி உறுதி அளித்துள்ளார்.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்ததன் எதிரொலி, கர்நாடகாவின் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனை தொடர்ந்து, அந்த அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 35 ஆயிரம் கனஅடி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழிபாட்டிற்காக மதுரை வந்த கர்நாடகா மாநில முதலமைச்சர் குமாரசாமி, "கவலைப் படாதீர்கள். இறை அருளால் போதிய மழை பெய்துள்ளது.
உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அளவிலான தண்ணீரை, என் தலைமையிலான அரசு நிச்சயம் திறக்கும். குறித்த நேரத்தில் தண்ணீர் திறப்பதில் பிரச்சினை இல்லை" என உறுதி அளித்துள்ளார்.
You'r reading உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நீர் - குமாரசாமி Originally posted on The Subeditor Tamil
More India News