அமைந்தது காவிரி மேலாண்மை வாரியம்! மசூத் ஹுசைன் தலைவர்!

by Rahini A, Jun 22, 2018, 19:34 PM IST

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு நீர் வளத் துறைத் தலைவர் மசூத் ஹூசைனைத் தலைவராக நியமித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது.

தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு மத்தியில் காவிரி நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில் கடந்த பல வருடங்களாக பிரச்னை நிலவி வந்தது. இதில் கர்நாடகா, காவிரி ஆற்றில் அணைகள் கட்டி, மற்ற மாநிலங்களுக்குத் தேவையான நீரை திறந்து விடாமல் வஞ்சித்து வந்தது.

இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த மே மாதம் 19 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில், `மத்திய அரசு, நான்கு மாநிலங்களுக்கு மத்தியில் நிலவி வரும் நீர் பங்கீட்டுப் பிரச்னையைத் தீர்க்க உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.

பருவ மழை ஆரம்பிப்பதற்கு முன்னர் வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்' என்று கூறி காவிரி பங்கீடு தொடர்பான வழக்கை முடித்து வைத்தது. இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்துள்ளது.

You'r reading அமைந்தது காவிரி மேலாண்மை வாரியம்! மசூத் ஹுசைன் தலைவர்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை