மக்களின் தீர்ப்பை எதிர்க்கும் தீர்மானம்!- ராஜ்நாத் சிங்

Jul 20, 2018, 18:51 PM IST

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களின் தீர்ப்பை எதிர்ப்பதாகவே உள்ளது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் மத்திய அரசு ஒன்றின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் முதன்முறையாக நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பாஜக-வுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது. அதற்கு தனியாக 273 சீட்கள் இருக்கின்றன. இது பாதியளவை விட மிக அதிகம். ஆனால், பாஜக-வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை எதிர்கட்சிகளால் எடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் எதிர்கட்சிகளை விமர்சிக்கும் வகையில் ராஜ்நாத் சிங், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதால்தான் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவில்லை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது மக்களின் தீர்ப்பை எதிர்ப்பது போல் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

You'r reading மக்களின் தீர்ப்பை எதிர்க்கும் தீர்மானம்!- ராஜ்நாத் சிங் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை