Advertisement

கெளரி லங்கேஷ் கொலை வழக்கு- கூடுதலாக இருவர் கைது

பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் சந்தேகத்தில் அடிப்படையில் கூடுதலாக இருவர் கர்நாடகா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் சமூக செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவரின் வீட்டுக்கு முன்னேலேயே சில நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்தக் கொலையை சில அடிப்படைவாதக் குழுக்குள் செய்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அமித் பாடி, கணேஷ் மிஸ்கின் என்பவர்களைத் தான் போலீஸ் தற்போது ஹூப்ளியில் கைது செய்துள்ளது. அவர்களை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உள்ளது போலீஸ். இருவரும் கௌரி லங்கேஷ் கொலையில் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்து போலீஸ் இன்னும் தெரிவிக்கவில்லை. ஆயினும் அவர்கள் லங்கேஷை கொலை செய்த ஆயுதத்தை அழிப்பதற்கு துணை புரிந்தினர் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாக கருதப்படுவது பரசுராம் வாக்மாரே.

அவர்தான், லங்கேஷை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை குறித்து கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, ‘ஜூலை 18 ஆம் தேதி மோகன் நாயக் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்டு கைது செய்யப்பட்டார். தற்போது, மேலும் சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். சீக்கிரமே சிறப்புப் புலனாய்வு குழு இந்த வழக்கு விசாரணையை முடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க
free-land-in-kashmir-for-sri-lankan-cricketer-muralitharan-jammu-and-kashmir-government-in-controversy
இலங்கை கிரிக்கெட் வீரர் முரளீதரனுக்கு காஷ்மீரில் இலவச நிலம்: சர்ச்சையில் ஜம்மு காஷ்மீர் அரசு
what-the-police-did-in-the-middle-of-the-road-in-a-bmw
பி.எம்.டபிள்யூவில் வந்து சாலையின் மத்தியில் செய்த காரியம்... தட்டி தூக்கிய போலீஸ்
champions-trophy-betting-alone-is-worth-rs-5-000-crore-mistletoe-caught-in-delhi
சாம்பியன்ஸ் டிராபி : பெட்டிங் மட்டும் 5 ஆயிரம் கோடி டெல்லியில் சிக்கிய புல்லுருவிகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்