கருப்பு பணம் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.5 கோடி பரிசு

கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 கோடி பிரிசு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் கருப்பு பணம், பினாமி சொத்துக்கள் என சட்டத்திற்கு விரோதமான செயல்கள் நடந்து வருகிறது. இதனால், கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், பினாமி சொத்துக்கள், கருப்பு பணம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரை பரிசு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைதவிர, வரி ஏய்ப்பு குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை வெகுமதி அளிக்கப்படுகிறது. இதேபோல், பினாமி சொத்துக்கள் குறித்து சரியான தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 கோடி வரை பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சரியான தகவல் அளித்தால் ரூ.5 கோடி வரை பரிசு அளிக்கப்படுகிறது.
கருப்பு பணம், பினாமி சொத்துக்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், தவறான தகவல் அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds