மேற்குவங்கம்...இனி பங்களா!- பேர் மாற்ற மசோதா நிறைவேற்றம்
மேற்குவங்க மாநிலத்தின் பெயர் இனி பங்களா என மாற்றப்படுவதாக மேற்குவங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மம்தா பேனர்ஜி முதல்வராகப் பதவி வகித்து வரும் மேற்குவங்க சட்டசபையில் இன்று மாநிலத்திந் பெயர் பங்களா என மாற்றப்படுவதற்கான சட்ட மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை அடுத்து இது தொடர்பான அறிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேற்குவங்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பெயர் மாறுதலுக்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இனி மேற்குவங்க மாநிலம் பங்களா என்றே அழைக்கப்படும். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
You'r reading மேற்குவங்கம்...இனி பங்களா!- பேர் மாற்ற மசோதா நிறைவேற்றம் Originally posted on The Subeditor Tamil
More India News