2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை

புதுடெல்லி: ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரைம் விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2004 & 2009 மற்றும் 2009 & 2014ம் ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியின்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெருமளவில் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.

இதனால், கடந்த 2011ம் ஆண்டு, திமுக கட்சியை சேர்ந்த மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் ஷாகித் பால்வார் உள்ளிட்ட 14 பேர் மீதும், 3 தனியார் நிறுவனங்கள் மீதும் 2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து, இதன் விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சுமார் 6 ஆண்டுகளாக நடந்த இந்த விசாரணையில் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதியன்று அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பு எழுதும் பணி தாமதமானதால் தீர்ப்பு தேதி ஒத்திவைப்பட்டது. இதன் பின்னர், தீர்ப்பு டிசம்பர் 21ம் தேதி அறிவிக்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்தார்.

இந்நிலையில், 2ஜி வழக்கு இன்று காலை 10.30 மணி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஒ.பி.சைனி முன்னிலையில் வந்தது. அப்போது, மனுதாரர் சுப்ரமணிய சுவாமி, குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

நாடே எதிர்பார்த்த 2ஜி வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஓ.பி.ஷைனி காலை 10.50 மணிக்கு வாசிக்க தொடங்கினார். அதில், 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து உத்தரவிடப்படுகிறது என கூறினார். சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சி.பிஐ தவறிவிட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds