வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது-வாக்களித்த திமுக வேட்பாளர் மருதுகணேஷ் பேட்டி

Dec 21, 2017, 10:06 AM IST

சென்னை: ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் இன்று காலையிலேயே பழை வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று அங்கு வரிசையில் நின்று அவர் தனது வாக்கை பதிவு செய்தார்.

இதுகுறித்து மருது கணேஷ் செய்தியாளர்களை சந்தித்தபோது,“ திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதமுகவுக்கும், மற்றவர்களுக்கும் தகுந்த பாடம் புகட்ட மக்கள் காத்திருக்கின்றனர். 6 ஆயிரம் அல்ல 60 ஆயிரம் கொடுத்தாலும் மக்கள் ஏமாற தயாராக இல்லை. இந்த தேர்தல் முறையாக நடக்க வேண்டும் நடக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

You'r reading வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது-வாக்களித்த திமுக வேட்பாளர் மருதுகணேஷ் பேட்டி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை