கேரள வெள்ளத்திற்கு தமிழகம் காரணமா?

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உரிய நேரத்தில் தமிழகம் தண்ணீர் திறக்காததும் வெள்ள பாதிப்புக்கு காரணம் என உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

Kerala floods

வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பதில் மனுத்தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கேரள அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "தமிழக அரசு உரிய முறையில், முன்கூட்டியே கவனமாக தண்ணீர் திறந்திருந்தால் வெள்ளப் பாதிப்பை குறைத்திருக்க முடியும். ஆகஸ்ட் 14 ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வெகுவேகமாக உயர்ந்தது. அப்போது கேரள தலைமை செயலாளர், தமிழக தலைமை செயலாளரை தொடர்பு கொண்டு, உரிய நேரத்தில் படிப்படியாக தண்ணீரை திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்."

"ஆனால், தமிழக அரசு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகஸ்ட் 14 ஆம் தேதி 137 அடியாக இருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை வேகமாக அதிகரித்த நிலையில், வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது."

"அதே நாள் காலை 8 மணி அளவில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால், இடுக்கி அணையை முழுமையாக திறக்க வேண்டிய நிலை உருவானது."

"தமிழகம் உரிய முறையில் கட்டுப்பாட்டுடன் நீரை திறந்திருந்தால், இடுக்கி அணையில் இருந்து கூடுதலாக நீரை திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது. வெள்ளப் பாதிப்பு இந்தளவு ஏற்பட்டிருக்காது" என கேரள அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "கேரள மாநில வெள்ளத்திற்கு 80 அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீரே காரணம். முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டுவிடாக் கூடாது என்பதற்காக தவறான தகவலை கேரள அரசு பரப்பி வருகிறது" எனக் கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds