மக்களிடம் ரொக்க கையிருப்பு அதிகம்... ரிசர்வ் வங்கி அறிக்கை

மக்களிடம் ரொக்க கையிருப்பு அதிகரித்துள்ளது - ரிசர்வ் வங்கி

Sep 3, 2018, 16:42 PM IST

நாடு முழுவதும், வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்தைவிட, மக்களிடம் உள்ள ரொக்க கையிருப்பே, மிக அதிகமாக உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

Reserve Bank

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "2017-ஆம் நிதியாண்டில், 9.4 லட்சம் கோடியாக இருந்த வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணம், 2018-ல் 4.7 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. அதேநேரத்தில், 2017-ல் 3.1 லட்சம் கோடியாக இருந்த ரொக்க கையிருப்பு, 2018-ல் 4.7 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது."

"2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, மக்களிடம் ரொக்க கையிருப்பு குறைந்து வங்கிகளில் டெபாசிட் பல மடங்கு அதிகரித்தது. ஆனால், தற்போது இந்த நிலை மாறி, வங்கி டெபாசிட் குறைந்து ரொக்க கையிருப்பு அதிகரித்து வருகிறது."

"பணவீக்கம் குறித்து எதிர்ப்பார்ப்பு, டெபாசிட்டுக்கு வங்கிகளில் குறைந்த வட்டி போன்றவையே ரொக்க கையிருப்பு அதிகரித்ததற்கு காரணமாக இருக்கலாம். வங்கிகளில் டெபாசிட் குறைந்தாலும், மறுபக்கத்தில் பங்குகள், பத்திரங்களில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது."

"2017-ல் 36,265 கோடியாக இருந்த பங்கு, பத்திரங்கள் முதலீடு, 2018-ல் 1.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதே போல், கடன் பெறுவது, 2017-ல் 2.4 சதவீதத்தில் இருந்து 2018-ல் 4 சதவீதமாக அதிகரித்துள்ளது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading மக்களிடம் ரொக்க கையிருப்பு அதிகம்... ரிசர்வ் வங்கி அறிக்கை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை