முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி உட்பட 6 பேருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Vigilance

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் வெளிநாடு வாழ் மாணவர்கள் கோட்டாவில் தகுதியில்லாத மாணவர்களை சட்டப் பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதி அளித்ததாகவும் அதன் மூலம் மாணவர்களிடம் பலகோடி வரை மிகப்பெரிய அளவில் லஞ்சம் பெற்றதாகவும் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

முன்னாள் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி, பதிவாளர் அசோக்குமார், பேராசிரியர்கள் சர்வானி, ஜெய சங்கர் உள்ளிட்ட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த மார்ச் மாதம் வழக்குப் பதிவு செய்தது.

சட்டப் பல்கலைக்கழகத்தில் வெளிநாடுவாழ் மாணவர்கள் போட்டோவில் 15% வரை மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் இந்த 15 சதவீதத்தில் தான் பெரும்பாலான முறைகேடுகள் நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

வெளிநாடுவாழ் மாணவர்கள் கோட்டாவில் 2016-ம் ஆண்டு சேர்க்கப்பட்ட 93 மாணவர்களில் 16 பேர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்பதும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 93 மாணவர்களில் பெரும்பாலோனோர் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானது எனவும் அதன் மூலம் போலியாக வெளிநாடுவாழ் மாணவர் கோட்டாவில் சட்டப்படிப்பு படித்து விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

வெளிநாடுவாழ் மாணவர் கோட்டாவில் படிக்க இடம் கிடைத்த ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்து சுமார் 30 முதல் 50 லட்சம் வரை லஞ்சமாக பெற்றுள்ளனர் பெற்றுள்ளதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கல்வித்துறை வட்டாரத்தில் மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்தியது இந்த வழக்கில், முன்னாள் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி உட்பட ஆறு பேரை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds