மனைவியிடம் தகராறு... தற்கொலைக்கு முயன்ற ஐபிஎஸ் அதிகாரி

உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் நகர காவல் கண்காணிப்பாளர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Poison

சுரேந்திர குமார் தாஸ் (வயது 30). 2014ம் ஆண்டு இந்திய காவல் பணி நியமனம் பெற்ற இவர், தற்போது கான்பூர் நகரத்தின் கிழக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். வியாழக்கிழமை விஷம் உண்டு தற்கொலைக்கு முயன்ற அவருக்கு தற்போது எக்மோ கருவி (ECMO - Extra Corporeal Membrane Oxygenation)மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுரேந்திர குமாருக்கு சிகிச்சை அளிப்பதற்காக எக்மோ கருவி மும்பையிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. கான்பூர் மருத்துவர்களுக்கு உதவுவதற்கு மும்பையிலிருந்தும் மருத்துவர்கள் வந்துள்ளனர்.

எலிக்கு வைக்க வேண்டும் என்று கூறி, வீட்டுப் பணியாளர் மூலம் நஞ்சு வாங்கிய சுரேந்திர குமார், அதை தாம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் மயங்கி கிடந்த இடத்திலிருந்து கையால் எழுதப்பட்ட கடிதத்தை கண்டெடுத்த போலீஸார், கையெழுத்தை பரிசோதிக்க நிபுணர்களிடம் அனுப்பி வைத்துள்ளனர்.

மனைவியுடனான தகராறின் காரணமாக சுரேந்திர குமார் தாஸ் மன உளைச்சலில் இருந்ததும், தாயிடமும் அவர் கடந்த 40 நாட்களாக பேசாமல் இருந்ததும், தற்கொலை செய்வதற்கான வழிகளை அவர் அவர் கூகுளில் தேடியுள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

36 மணி நேரம் கழித்தே அவரது உடல்நிலை குறித்து கூற இயலும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கான்பூர் கூடுதல் டிஜிபி அவினாஷ் சந்திரா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds