நாடு முழுவதும் 328 மருந்துகளுக்கு அதிரடி தடை!

மத்திய சுகாதார அமைச்சகம் 328 மருந்து வகைகளின் உற்பத்தி, விற்பனை, விநியோகம் ஆகியவற்றுக்கு உடனடியாகத் தடை விதித்துள்ளது.

drugs prohibited

2018 செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையின் படி இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. மருந்துகள் ஒப்பனைப் பொருட்கள் சட்டம் 1940 26 ஏ பிரிவின் கீழ் 344 வகையான மருந்துகளுக்கு, மத்திய அரசு ஏற்கனவே தடை விதித்து. அரசிதழில் 2016ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது

அரசின் இந்த முடிவை எதிர்த்து மருந்து உற்பத்தியாளர்கள் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2017ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி மருந்துகளை தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஆய்வு செய்தது.

அந்த போர்டு அளித்த அறிக்கையில், 328 மருந்துகளில் உள்ள பொருட்கள் ஆபத்தில்லாதவை என்று மருத்துவ ரீதியில் நியாயப்படுத்த இயலாது என்று குறிப்பிட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சாரிடான் (வலி நிவாரணி), க்ளூகோநாம் பிஜி (ஆன்டி பயோடிக்), டாசிம் ஏஇசட் உள்ளிட்ட 328 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

அதே சமயம் டி கோல்டு டோட்டல், கோரக்ஸ் உள்ளிட்ட சளி நிவாரணி மருந்துகளுக்கு, சில நிபந்தனைகளுடன், மருத்துவப் பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என அந்த குழு பரிந்துரைத்துள்ளது.

328 மருந்துகளில் வேதி பொருட்களின் சேர்க்கை விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும், இவைகள் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :