இமாச்சல் பிரதேசத்தில் காணாமல் போன 50 ஐஐடி மாணவர்கள் பத்திரமாக மீட்பு

by Isaivaani, Sep 26, 2018, 08:17 AM IST

இமாச்சல் பிரதேசத்தில் பெய்த கனமழையில் சிக்கி காணாமல்போன, 50 ஐஐடி மாணவர்களை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கடும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும், வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குலு, மணாயிலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது, சாலைகள் ஆங்காங்கே துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குலு, மணாலியில் குவிந்துள்ள சுமார் இரண்டாயிரம் சுற்றுலா பயணிகள் அங்கு சிக்கியுள்ளனர். மேலும், பியாஸ் நதியில் பேருந்து ஓன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளிப்பெருக்கில் சிக்கி 16 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், இமாச்சலபிரதேசத்தில் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டவர்களின் நிலை என்ன என்பது குறித்து கேள்வி எழுந்தது. ரூர்கேசா ஐஐடியில் இருந்து சுமார் 50 மாணவர்கள் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள லகுல் மலையில் ஏறும் பயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த 50 ஐஐடி மாணவர்களும் கனமழை, நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதனால், இவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன 50 ஐஐடி மாணவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை, இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

You'r reading இமாச்சல் பிரதேசத்தில் காணாமல் போன 50 ஐஐடி மாணவர்கள் பத்திரமாக மீட்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை