இமாச்சல் பிரதேசத்தில் காணாமல் போன 50 ஐஐடி மாணவர்கள் பத்திரமாக மீட்பு

இமாச்சல் பிரதேசத்தில் பெய்த கனமழையில் சிக்கி காணாமல்போன, 50 ஐஐடி மாணவர்களை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கடும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும், வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குலு, மணாயிலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது, சாலைகள் ஆங்காங்கே துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குலு, மணாலியில் குவிந்துள்ள சுமார் இரண்டாயிரம் சுற்றுலா பயணிகள் அங்கு சிக்கியுள்ளனர். மேலும், பியாஸ் நதியில் பேருந்து ஓன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளிப்பெருக்கில் சிக்கி 16 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், இமாச்சலபிரதேசத்தில் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டவர்களின் நிலை என்ன என்பது குறித்து கேள்வி எழுந்தது. ரூர்கேசா ஐஐடியில் இருந்து சுமார் 50 மாணவர்கள் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள லகுல் மலையில் ஏறும் பயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த 50 ஐஐடி மாணவர்களும் கனமழை, நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதனால், இவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன 50 ஐஐடி மாணவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை, இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds