மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள்!

 


நாட்டில் மூன்றில் ஒரு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள்


சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்து, ஏ.டி.ஆர் என்ற அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 4083 சட்ட மன்ற உறுப்பினர்களில் 1355 உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 891 உறுப்பினர்கள் மீது தீவிரமான கிரிமினல்
வழக்குகள் உள்ளன.

தமிழகத்தில் 75 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 44 திமுக உறுப்பினர்கள் மற்றும் 28 அதிமுக உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. பெரும்பாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் எம்.எல்.ஏக்கள் மீது இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

புதுச்சேரி மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் 30 பேரில், 11 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக ஜார்காண்ட் மாநிலத்தில் 63 சதவீத சட்டமன்ற
உறுப்பினர்கள் மீது கிர்மினல் வழக்குகள் உள்ளன. இது கேரளாவில்
62 சதவீதமாகவும், பிகாரில் 58 சதவீதமாகவும், மகாராஷ்ட்ராவில்
57 சதவீதமாகவும் உள்ளது.

மக்களவையில் 179 உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள்
நிலுவையில் உள்ளன. மாநிலங்களவையில் 51 உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. வழக்குகள் முடிந்து, குற்றம் நிரூபிக்கபட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கபட்டால் மட்டுமே இவர்கள் பதவி இழப்பை சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds