துர்கா பூஜைக்கு போடப்பட்டிருந்த பந்தலில் தீவிபத்து!
Fire Breaks Out at Durga Puja Pandal in Madhya Pradesh
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில் துர்கா பூஜைக்கு போடப்பட்ட பந்தலில் தீப்பிடித்தது.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த 15ஆம் தேதி தொடங்கிய துர்கா பூஜை, நாளை மறுநாள் வரை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, பல்வேறு அமைப்புகளின் சார்பில் சிறப்பு பூஜை, நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில் துர்கா பூஜைக்காக பிரமாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது.
அங்கு இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிந்ததால், அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
You'r reading துர்கா பூஜைக்கு போடப்பட்டிருந்த பந்தலில் தீவிபத்து! Originally posted on The Subeditor Tamil
More India News